தேயிலை தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லவும், இரவு நேரங்களில் வெளி பகுதிகளில் நடமாட முடியாமலும் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், சமவெளி பகுதிகளிலிருந்து ஒற்றை ஆண் கொம்பன் யானை ஒன்று பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகிறது. வனத்துறை சார்பில், இருமுறை விரட்டியடித்தும் மீண்டும் கிராமப்பகுதிக்கு வந்து செல்வதால், மக்கள் வீட்டைவிட்டு இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, மனித-விலங்குகள் மோதல் ஏற்படும் முன்பு அளக்கரை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் ‘ஆண் கொம்பன்’ யானை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.