பேராவூரணி எம்எல்ஏ நிதியில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல்

 

தஞ்சாவூர், அக்.8: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கப்பட்டது. பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வின்சென்ட் ஜெயராஜ், செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் முருகேசன் ஆகியோருக்கு, எம்எல்ஏ அசோக்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று சக்கர ஸ்கூட்டியை, எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி எம்எல்ஏ நிதியில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: