பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’

பழநி: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்காரும், மேற்கு கிரி வீதியில் இருந்து 3 வின்ச்களும் இயக்கப்படுகின்றன. இதில் ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். ஒரு மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம்.

இந்த ரோப்காரில் இன்று (அக்டோபர் 7) முதல் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 40 நாட்களுக்கு ரோப்கார் இயங்காது. மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச்களை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

The post பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’ appeared first on Dinakaran.

Related Stories: