சிறுவனுடன் காதல் பயிற்சி: ஆசிரியை போக்சோவில் கைது

பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, அம்பாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது பெண். இவர், அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக உள்ளார். இவரும், உடையார்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும் காதலித்துள்ளனர். காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. இதையடுத்து இருவரும், கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள சிறுவனின் உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் உடல்நலம் தேறி வீடு திரும்பினர். இதுகுறித்து சிறுவனின் தந்தை, குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பயிற்சி ஆசிரியையை நேற்று கைது செய்தனர்….

The post சிறுவனுடன் காதல் பயிற்சி: ஆசிரியை போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: