பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

கும்மிடிப்பூண்டி: பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி ஆணையர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் திருமலை ஆகியோர் வரவேற்றனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார், பொதுகுழு உறுப்பினர் குணசேகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஜினி, பெருவாயில் சுரேஷ், ஷாம், டில்லி, பாலசண்முகம், மாணவரணி துணை அமைப்பாளர் தமிழரசு, ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: