புண்ணியக்கோட்டீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கம்

செய்யாறு, செப். 28: செய்யாறு அருகே கீழ்புதுபாக்கம் கிராமத்திலுள்ள புண்ணியக்கோட்டீஸ்வரர் கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினர் நேற்று அளவீடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் நேற்று புண்ணியக்கோட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் 1 ஏக்கர் 33 சென்ட் உள்ளது. கோயில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் முத்துசாமி தலைமையில் தனி வட்டாட்சியர்கள், திருநாவுக்கரசு, (ஓய்வு) சுப்ரமணியன் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள், கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நிலத்தினை ஆய்வு செய்து நவீன தொழில்நுட்ப கருவியின் மூலம் அளவீடு செய்தனர்.

The post புண்ணியக்கோட்டீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: