கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!!

உதகை: கூடலூர் அருகே செப்பந்தோடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டுயானை ஒன்று 60 வயதான மொய்தீனின் தோட்டத்தில் உள்ள பாக்கு மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

மரங்கள் முறியும் சத்தம் கேட்டு வெளியே வந்த மொய்தீனை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அதனை அடுத்து யானையை வனப்பகுதிக்கு விரட்ட கோரி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

The post கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: