கொடைக்கானலில் நிலப்பிளவு ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கிளாவரை அருகே, வந்தரவு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சில தினங்களுக்கு முன் திடீரென 85 மீட்டர் தூரத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டது. இதனால், கேரளா மாநிலம் வயநாட்டைப் போல நிலச்சரிவு ஏற்படுமோ என அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வக அதிகாரிகள் விவேக் சிங் மற்றும் குன்குளோ ஆகியோர் நேற்று நிலப்பிளவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் டேப் மூலம் நிலப்பிளவின் நீளம், அகலத்தை அளவீடு செய்தனர். அப்போது இந்த பகுதியில் நிலப்பிளவு ஏற்பட்டது எப்படி, இதனால், ஏற்படும் பின் விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்றனர்.

The post கொடைக்கானலில் நிலப்பிளவு ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: