சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 26: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக சிஐடியு திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாவட்ட தன்மைக்கு ஏற்ப கட்டுப்படியாகும் வகையில் நிர்ணயம் செய்திட வேண்டும். காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அலுவலகங்கள் மூலம் விதிக்கப்படும் ஆன்லைன் அபராத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் மூலம் உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைத்திட வேண்டும்.

மேலும், குற்றவியல் நடைமுறை சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். ஆட்டோ முறைசாரா நல வாரியத்தின் குளறுபடிகளை சரி செய்து பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சங்க மாவட்ட செயலாளர் அன்பு, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவராமன், பொருளாளர் பெருமாள், துணை தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: