டூ வீலர் மீது பஸ் மோதி மாணவி பரிதாப பலி

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூரை சேர்ந்த ஜெயராஜ் மகள் அஸ்வினி (16). திருவாரூர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரது சித்தி மகன் அபினாஷ் (11), அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும், பள்ளிக்கு செல்வதற்காக, நேற்று காலை வீட்டில் இருந்து குருக்கதி மெயின்ரோட்டுக்கு ஸ்கூட்டியில் சென்றனர்.

ஸ்கூட்டியை அஸ்வினி ஓட்டியுள்ளார். செருநல்லூரில் இருந்து நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பஸ், ஸ்கூட்டி மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபினாஷ் சிகிச்சை பெற்று வருகிறான்.

The post டூ வீலர் மீது பஸ் மோதி மாணவி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: