சென்னை மாநகராட்சி ஆணையரின் மாமனார் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் மாமனார் உமாசங்கர் (68) உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குமரகுருபரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post சென்னை மாநகராட்சி ஆணையரின் மாமனார் மறைவு: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: