அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணியில், தலைமை கழகத்தில் இருந்து உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுச் சென்றுள்ள நிர்வாகிகளில் சிலர்,

சம்பந்தப்பட்ட அதிமுக உறுப்பினர்களிடம், உறுப்பினர் அட்டைகள் வழங்கும் பணியினை இன்னும் நிறைவு செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் உறுப்பினர் அட்டைகளை ஒப்படைத்து விரைந்து முடிக்க வேண்டும்.

The post அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: