ஒன்றிய அரசை கண்டித்து தபால் நிலையம் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஒன்றிய அரசை கண்டித்து, செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கூட்டமைப்பின் மாநில செயலாளர் பொண்ணுராம் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்திய தொழிலாளர் வர்த்தகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ரத்தம் சிந்தி தியாகிகள் பல செய்து போராடி வென்றெடுத்த 44 தொழிலாளர்களின் சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதை வண்மையாக கண்டிக்கிறோம்.

ஒன்றிய மோடி அரசால் நான்கு தொகுப்புகளாக திருத்தப்பட்ட இந்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தபால் நிலையம் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: