5 நீதிபதிகளை நிரந்தரமாக்கி குடியரசுத் தலைவர் ஆணை

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று 5 பேரையும் ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிம் அகமதுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி சமிம் அகமது சென்னைக்கு மாற்றப்பட்டதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

 

 

The post 5 நீதிபதிகளை நிரந்தரமாக்கி குடியரசுத் தலைவர் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: