×

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணியில் இதுவரை 8 குழிகளில் பணி முழுமை அடைந்த நிலையில் தற்போது 9 மற்றும் 10 குழிகள் தோண்டப்பட்டு பணி நடந்து வருகிறது. இதுவரை உடைந்த நிலையில் சூடுமண் உருவப்பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், சூதுபவள மணி உள்ளிட்ட 1700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட 9வது குழியில் சுடு மண்ணால் ஆன கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘நமது முன்னோர் பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்று, தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான சான்று அதிக அளவில் கிடைத்து வருகிறது. அதிக அளவில் கண்ணாடி மணிகள் மற்றும் காதணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து வருவதால் முக அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெரியவருகிறது. தற்போது கிடைத்துள்ள கிண்ணம் உணவு அருந்துவதற்கு அல்லது மூடியாக பயன்படுத்தி இருக்கலாம்’ என்றார்.

 

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakarisalkulam ,Wembakote ,Vijayakarisal Cluster ,Vembakote, Virudhunagar District ,Soduman Bowl ,Vijayakarisalkulam Excavation ,Dinakaran ,
× RELATED முக அலங்காரத்திற்கு முன்னோர்கள்...