×

காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்: போலீசுடன் வாக்குவாதம் – பரபரப்பு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வன்னியர் சங்க இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாமக சார்பில் பண்ருட்டி அடுத்த கொள்ளுகாரன் குட்டை என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்பதாக இருந்தது. இதற்காக பாமகவினர் அங்கு ஏற்பாடு செய்து அன்புமணி வருகைக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் அன்புமணி வருவதற்கு முன்பு காடுவெட்டி குருவின் மகனான கனல்அரசன் அந்த நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்துவதற்கு வருவதை அறிந்த பாமகவினர் கீழகொல்லை என்ற பகுதியில் கனல்அரசன் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனால் கனலரசனுடன் வந்தவர்களுக்கும், பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினர் தலையிட்டு பாமகவினரை அனுப்பி வைத்தனர். அப்போது அன்புமணி அஞ்சலி செலுத்தியபிறகுதான் கனல்அரசன் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டுமென பாமகவினர் காவல் துறையினரிடம் முறையிட்டனர்.

அதன்பிறகு கனல்அரசனை தடுத்து நிறுத்திய போலீசார், பாமகவினர் காவல்துறை அனுமதியுடன் இந்நிகழ்ச்சியை நடத்துவதாகவும், நீங்கள் அனுமதி பெறவில்லை என்று கூறினர். இதனால் காவல் துறையினருடன் கனல்அரசன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது காவல் துறையினர் அன்புமணி வருகை ஏற்கனவே முன்அனுமதி பெற்று நடைபெறுவதால் அவர்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்ட வட்டமாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல்அரசன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

The post காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்: போலீசுடன் வாக்குவாதம் – பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bamakavinar ,Panruti ,Vanniyar ,Sangh ,Cuddalore district ,Kollukaran Guttai ,BAMA ,BAMAK ,Anbumani ,Bamakavins ,Kaduvetti ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை...