நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குல் – அதிர்ச்சி வீடியோ

நாகை: நாகை மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியானது. செருதூர் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு மூழ்கியது. படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த நாகை மாவட்ட மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். தங்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாடியுள்ளனர். தாக்குதல் நடத்துவதை தடுக்கவும், ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுக்கவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குல் – அதிர்ச்சி வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: