31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.11: தொடக்க கல்வி ஆசிரியர் இயக்க குழு சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட செயலாளர் செல்வகணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பெண் ஆசிரியர்களின் பதவிகளை பறிக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: