செந்தில் பாலாஜி குறித்து அவதூறு: சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் குறித்து செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி நிர்மல் குமார் பதிவிட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தனிநீதிபதி தடை விதித்தார். இந்நிலையில், தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து சி.டி.ஆர்.நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

The post செந்தில் பாலாஜி குறித்து அவதூறு: சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: