×

நாகை மீனவர்கள் 11 பேர் விடுதலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சாந்தி என்பவரின் விசைப்படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் கடந்த 23ம் தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 41 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 

The post நாகை மீனவர்கள் 11 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Akkaraipet ,Kodiakarai ,Shanthi ,Akkaripet, Nagapattinam district ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை...