உடல் நலக்குறைவால் காலமான ஞானபாரதி உடல், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம்

கோவை: உடல் நலக்குறைவால் காலமான மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஞானபாரதியின் (76) உடல், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. ஞானபாரதி, தான் இறந்து விட்டால் உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என தெரிவித்து இருந்த நிலையில், அவரது விருப்பப்படியே இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கபட்டது. ஞானபாரதியின் உடலை ESI மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர்.

The post உடல் நலக்குறைவால் காலமான ஞானபாரதி உடல், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம் appeared first on Dinakaran.

Related Stories: