ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் 5ம் தேதி வரை பெறலாம்: நுகர்வோர் பாதுகாப்பு துறை தகவல்

சென்னை: பொது விநியோக திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வரும் 5ம் தேதிவரை பெறலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளிலும் ஆகஸ்ட்டுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாக பெற்று பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகளை வரும் 5ம் தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம்.

The post ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் 5ம் தேதி வரை பெறலாம்: நுகர்வோர் பாதுகாப்பு துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: