வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

 

திருச்சி, ஆக.31: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருச்சியை சேர்ந்த 25வயது இளம்பெண் மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (32) என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது, வரதட்சணையாக 100 சவரன் நகை, கார்கள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான். சித்திக் மதுரையில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சித்திக் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது தந்தை வீட்டிற்கு இளம்பெண் வந்து விட்டார். அப்போது நகைகளை திருப்பி தருவதாக சித்திக் உறுதியளித்துள்ளார். ஆனால், நகைகளை அவர் கொடுக்கவில்லை. இதுகுறித்து திருச்சி நீதிமன்றத்தில் இளம்பெண் வழக்கு தொடுத்தார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார், கடந்த 29ம் தேதி அபுபக்கர் சித்திக் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: