கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் முசரவாக்கம் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கோழி பண்ணை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென கோழிப்பண்ணையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று அதிகமாக அடித்ததால் தீ மளமளவென பரவி உள்ளது. இதைக் கண்ட உரிமையாளர் சீனிவாசன் உடனடியாக பாலு செட்டி சத்திரம் காவல்துறைக்கும் , தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி இருந்துள்ளது. மேலும், தீ பரவாமல் இருக்க தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: