புல்லரம்பாக்கம் கோயிலில் தீமிதி திருவிழா

திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மராஜா சமேத ஸ்ரீ திரவுபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றறது. இதில், 250க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராமானோர் பங்கேற்றறனர். இந்த தீமிதி திருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பூ, பழம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post புல்லரம்பாக்கம் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: