இதையடுத்து 3 பேர் பயணங்களையும் ரத்து செய்து, அவர்கள் வைத்திருந்த நட்சத்திர ஆமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து 3 பேர் வைத்திருந்த 780 நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து, இந்த நட்சத்திர ஆமைகளை, பிடித்து வந்து, மலேசியாவுக்கு கடத்தி செல்வதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்றும் தெரிய வந்தது. பின்னர் பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகளை கிண்டி சிறுவர் பூங்கா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணியின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 இ-சிகரெட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.37 லட்சம். இதையடுத்து இ-சிகரெட்களை பறிமுதல் செய்து பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்புடைய நட்சத்திர ஆமைகள், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புடைய இ-சிகரெட்டுகள் என மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற780 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.