நேற்றும் இதுபோல் ஏராளமானோர் சமையல் செய்து மதிய உணவு உண்டு ஆற்றில் குளித்த வண்ணம் இருந்தனர். இதுபோல் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அருவி சுற்றிப்பார்த்து விட்டு ஆற்றின் கரை வழியாக நடந்து ஆற்றின் மறுபகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டு விட்டு மது அருந்தியுள்ளனர். நேற்று லேசான சாரலுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் இவர்கள் மதுபானங்கள் அனைத்தையும் குடித்து விட்டு போதையில் இருந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மேல் உபரிநீர் வரத்தொடங்கியதால் கோதையாற்றின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. இதனால் ஆற்றின் கரையோரம் நின்று குளித்துக்கொண்டு இருந்தவர்கள், மறுபக்கத்தில் இருந்த இவர்களிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்கிறது சீக்கிரம் கரை திரும்புங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்களால் எழுந்து சரியாக நடக்க முடியவில்லை. இருந்தும் சமாளித்து நடந்து ஆற்றில் உள்ள ஒரு பாறையில் ஏறி அமர்ந்துள்ளனர். அதற்கு மேல் வரமுடியவில்லை. அவர்களில் சற்று தௌிவுடன் இருந்த ஒரு நபர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
அப்போது சிலர் அங்கு சென்ற அவர்களை மீட்டு அழைத்து வர முயன்ற போது வெள்ளம் அதிகரித்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ முருகேசன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்று மாலை சுமார் 5 மணிக்கு மீட்பு பணியை தொடங்கினர். அவர்களுக்கு உதவியாக அப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் களம் இறங்கினர். தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றை கடந்து சென்று பாறையில் சிக்கியிருந்த 3 பேரையும் மிதவைகள் உதவியுடன் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி 3 பேரையம் இரவு 7 மணியளவில் கரை சேர்த்தனர். உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் 3 பேரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் அவர்களோடு இணைந்து செயல்பட்ட பொதுமக்களையும் அனைவரும் பாராட்டினர்.
The post திற்பரப்பு அருவி அருகே கோதையாற்று வெள்ளத்தில் சிக்கிய கேரள சுற்றுலா பயணிகள் 3 பேர் மீட்பு appeared first on Dinakaran.