திமுக ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

 

மதுரை, ஆக. 17: மதுரை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஆக.29ல் நடைபெறும் என, அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதற்கு தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், கட்சியின் பவள விழாவை வரவேற்கும் வகையில் நடைபெறும் முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை விளக்கும் வகையிலும், திமுக ஆக்கப் பணிகள் குறித்தும், மதுரை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர்கள் குழு கூட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள ஏ.கே.என்.கே பேலஸ் திருமண மகாலில் ஆகஸ்ட் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், என அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திமுக ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: