மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயரந்து ரூ.52,520-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.

The post மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: