வண்டலூர் உயிரியல் பூங்காவில் சர்வதேச திறன் மேம்பாட்டு பயிற்சி

தாம்பரம்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, பள்ளியில், சிங்கப்பூரின் மாண்டாய் வனவிலங்கு குழுவினால் வழங்கப்பட்ட உயிரியல் பூங்காவின் நபர்களுக்கான முதல் வகை, சர்வதேச திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்தது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், இயக்குநருமான ஆசிஸ்குமார் வஸ்தவா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில், சிங்கப்பூர் மாண்டாய் வனவிலங்கு குழுமத்தின் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார், சிங்கப்பூர் உயிரியல் பூங்காவின் விலங்கு பராமரிப்பு, நடத்தை மேலாண்மை, விலங்கு இருப்பிட வடிவமைப்பு, பாதுகாப்பு இனப்பெருக்கம், வனஉயிரின வளர்ப்பு நடைமுறைகள் மற்றும் விலங்குக் காப்பாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் அவர்களின் உயிரியல் பூங்காவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்ததோடு அறிவையும் உத்வேகத்தையும் வழங்கியது. தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் ஆகியவற்றின் கீழ் பணிபுரியும் உயிரியல் பூங்கா பணியாளர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். நிகழ்வில் துணை இயக்குநர் திலீப்குமார், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களை சேர்ந்த மூத்த வன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் சர்வதேச திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: