தனது வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்ட பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

சென்னை: மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில், தனது வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக திவ்யா என்ற பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து தாம்பரம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நாய் யாரையும் கடிக்க வில்லை, வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்னை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர் என திவ்யா விளக்கமளித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் முன்பாக விளக்கம் அளித்து அபராத விலக்கு கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தனது வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்ட பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: