×

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எட்டாவாவில் ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து நள்ளிரவு 12:30 மணியளவில் கார் மீது மோதியது.

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் சனிக்கிழமை இரவு பேருந்தும் காரும் பயங்கரமாக மோதியது. இதனால் 6 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். இதன் தாக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், கார் அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கீழே விழுந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உதவியுடன் சைபாய் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதித்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்.

இறந்தவர்களில் 3 பேர் பேருந்திலும், 3 பேரும் காரில் பயணம் செய்துள்ளனர். லக்னோவில் இருந்து ஆக்ரா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில், எதிர்புறத்தில் இருந்து லக்னோ நோக்கி வந்த சைலோ கார் ஒன்று ராங் சைடில் வந்து மோதியது. மோதல் சத்தம் அதிகமாக இருந்ததால் பஸ், கார்களில் சென்றவர்கள் அலறினர். தற்போது இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் காரில் பயணம் செய்த 3 பேரும், பேருந்தில் பயணம் செய்த 3 பேரும் அடங்குவர் கடாஹியா உசர், தல்கிராம், கண்ணுஜ், மோனு சந்தாவின் தாயார் 50 வயது, ஓம் பிரகாஷ், வயது 50, அஷ்ரஃபியின் மகன், பர்ஸாரியா கேரி, மாவட்டம் லக்கிம்பூர் கேரி, அமேதியில் வசிக்கும் ராஜு சா மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் பயணம் செய்தனர்.

 

The post உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Agra ,Lucknow National Highway ,Etawah ,Delhi ,Dinakaran ,
× RELATED உத்திரப் பிரதேச அரசு ஊழியர் சொத்து விவரம்: அவகாசம் நீட்டிப்பு