இவர்களில் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், நகராட்சி துவக்கப்பள்ளி நிவாரண முகாம் மற்றும் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், செங்குந்தர் திருமண மண்டப நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று முதல்வர் கேட்டறிந்தார். அப்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முகாம்களில் செய்து தரப்பட்டுள்ளது என்றும், அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இத்துடன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோரிடம் முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, பேரிடர் மேலாண்மை இயக்குநர் மோகனசந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: முகாம்களில் உள்ள மக்களிடம் தொலைபேசியில் உரையாடல் appeared first on Dinakaran.