பேக்கரி கடை உரிமையாளர் கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசியில்

வந்தவாசி, ஆக.2: வந்தவாசியில் பிரபல பேக்கரி கடை உரிமையாளர் திடீரென மாயமானார். கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் தலைமறைவானரா? அல்லது கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி டவுன் கலுங்கும் மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் முகமது ரசூல் (42) இவர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வியாபாரத்திற்காக இவர் அதிக வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து இவரை மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் எங்கு தேடியும் கிடைக்க வில்லையாம். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை யாராவது கடத்திச்சென்றார்களா என்றும் தெரியவில்லை. இதுகுறித்து ரசூல் மகன் முகமது அலி வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் தலமைறைவானரா? அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

The post பேக்கரி கடை உரிமையாளர் கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசியில் appeared first on Dinakaran.

Related Stories: