×

செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி: குன்றத்தூர் அருகே சோகம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே செல்போனிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் சுழிவலம், வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர், கடந்த சில ஆண்டுகளாக குன்றத்தூர், சுப்புலெட்சுமி நகர், ஒன்றிய காலனியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன், தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக செல்போன் சார்ஜரில் மின்கசிவு ஏற்பட்டு, பாலமுருகன் மின்சாரம் பய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அவரது, அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பாலமுருகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த பாலமுருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி: குன்றத்தூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Balamurugan ,North Street, Suzhivalam, Thanjavur district ,Union Colony ,Subbuletchumi Nagar, Kunradthur ,
× RELATED குன்றத்தூர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்