மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,100 புள்ளிகளைக் கடந்து சாதனை..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,100 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தொடக்க நேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 82,129 புள்ளிகளை தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் 81,868 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. பவர் கிரிட் பங்கு 3.6%, என்டிபிசி பங்கு 1.75%, எச்டிஎஃப்சி வங்கி, நெஸ்லே, அதானி போர்ட்ஸ் பங்குகள் 1% விலை உயர்ந்தன. மாருதி சுசூகி, பார்த்தி ஏர்டெல், ரிலையன்ஸ், JSW ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எம்&எம் பங்கு 2.6%, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்செர்வ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ் பங்குகள் தலா 1% விலை குறைந்தன. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்வுடன் 25,011 புள்ளிகளில் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,100 புள்ளிகளைக் கடந்து சாதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: