இதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிரடி படை, விமான பாதுகாப்பு படை, விமான கடத்தலை முறியடிக்கும் சிறப்பு அதிரடி படையினர் ஒருங்கிணைந்து இயந்திரத் துப்பாக்கிகளுடன், விமான ஓடுபாதை பகுதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது கருப்பு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, தீவிரவாதிகள் போல் மறைந்திருந்த 4 இளைஞர்களை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இதையடுத்து, பாதுகாப்பு ஒத்திகை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
The post சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.