நகரில் அதிகரித்துள்ள தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

 

ஊட்டி, ஜூலை 31: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அனைத்து வார்டுகளிலும் அதிகமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. அதேபோல், ஊட்டி-மைசூர் சாலையில் ஹில்பங்க் அருகே அதிகளவு தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும், பாம்பேகேசில், காந்தல், மருத்துவமனை வளாகம், நகராட்சி அலுவலகம், எச்பிஎப். பிங்கர்போஸ்ட் போன்ற பகுதிகளில் ஏராளமான நாய்கள் உள்ளன.

இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை கூட்டமாக நாய்கள் விரட்டுகின்றன. இதனால், பலர் கிழே விழுந்து காயம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, நடந்து செல்பவர்களை விரட்டிச்சென்று கடிக்கின்றன. இரவு 10 மணிக்கு மேல் ஊட்டி நகரில் எந்த ஒரு பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நகரில் அதிகரித்துள்ள தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: