நின்ற பஸ் மீது டூவீலர் மோதி தொழிலாளி சாவு

தர்மபுரி, ஜூலை 31: அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பொய்யப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெபமணி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சிதம்பரம் நேற்று முன்தினம் பொய்யப்பட்டி தீர்த்தமலை சாலையில் பெரியகுளம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் நின்ற பஸ் மீது எதிர்பாராத விதமாக டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post நின்ற பஸ் மீது டூவீலர் மோதி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: