₹2.21 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், ஜூலை 31: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டுவந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் 631.40 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனையானது. இதில் பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ₹430க்கும், குறைந்தபட்சம் ₹200க்கும், சராசரியாக கிலோ ₹350.25க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 631 கிலோ பட்டுக்கூடுகள் ₹2.21 லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹2.21 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: