லாரியில் தீப்பிடித்து டிரைவர் கருகி பலி

ஓட்டப்பிடாரம்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்ற வெள்ளையன் (38). ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து டிப்பர் லாரியில் தார் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் கம்பெனியில் லாரியை நிறுத்திவிட்டு லாரிக்குள் தூங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரியில் தூங்கிய ராதாகிருஷ்ணன், உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

The post லாரியில் தீப்பிடித்து டிரைவர் கருகி பலி appeared first on Dinakaran.

Related Stories: