போக்குவரத்து துறையை தனியார் மயம் ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கடலூர்: போக்குவரத்து துறையை தனியார் மயம் ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூரில் தெரிவித்துள்ளார். கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கல் என்பது முற்றிலும் கிடையாது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தனியாருக்கு டெண்டர் விடுவதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி.

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 7,300 புதிய பேருந்துகள் வாங்க உள்ள நிலையில், தற்போது ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இடைப்பட்ட காலத்திற்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிய பின்பு நீக்கப்படுவார்கள். அரசை குறை கூறவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இது போன்ற சர்ச்சை எழுந்துள்ளது. போக்குவரத்து தனியார் மயமாக்கல் என ஒரு மாதத்திற்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி,டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை விடுத்தனர்.

தற்பொழுது ஒரு மாதம் தூங்கி எழுந்து சீமான் அதே கருத்தை தெரிவிக்கிறார். சீமானுக்கு இலங்கை பிரச்சனையும் ஈழத்தமிழர் பிரச்சனை மட்டும்தான் தெரியும். அரசியல் காரணத்திற்காக இது போன்று கூறி வருகின்றனர். எது சொன்னாலும் அதனை தெரிந்து சொல்வது சீமானுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார். திமுக கடலூர் மாநகர செயலாளர் ராஜா, அவைத்தலைவர் பழனிவேல், மண்டல குழு தலைவர் பிரசன்னா வழக்கறிஞர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

The post போக்குவரத்து துறையை தனியார் மயம் ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: