ஒன்றிய அரசை கண்டித்து ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம்

 

கோபி,ஜூலை 27: ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் 27ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோட்டில் உள்ள காளை மாடு சிலை அருகே உள்ள சிம்னி ஓட்டல் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், கட்சியினர், அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் அழைப்பு விடுத்துள்ளார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: