போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 27: தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அரசு உயர் நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் ஜவளகிரி ஊராட்சி தலைவர் நாகரத்னா ரேணுகாகுமார், தலைமை ஆசிரியர் வெங்கடேசப்பா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாதேஷ், எஸ்எம்சி தலைவர் லட்சுமிபாய் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக, போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: