கூரியர் நிறுவனத்தில் ₹1 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி, ஜூலை 26: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (29). இவர் கிருஷ்ணகிரி- சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஏரி அருகேயுள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ம் தேதி மாலை, கூரியர் அலுவலகத்தை மூடிவிட்டு, மறுநாள் காலை வந்த போது, அங்கு ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ₹1 லட்சத்து 2 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் சேகரித்து விட்டு சென்றனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் 2 வாரத்திற்கு பின், நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கூரியர் நிறுவனத்தில் ₹1 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: