16 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்

ஓசூர், ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த 16வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதில், ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த சதீஷ்(19) என்பவர், எங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 16 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: