காரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி, ஜூலை 25: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் எஸ்ஐ ஜீவானந்தம் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எட்டியாம்பட்டி பெரியமாரியம்மன் கோயில் அருகே, காரில் இருந்தபடி சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்று, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காரில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த, பென்னாகரம் செக்குமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் துரை (25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர்.

The post காரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: