முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

 

ஈரோடு, ஜூலை 24: ஈரோட்டில் அரசு முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த 401 ஆசிரியை, ஆசிரியர்கள் பங்கேற்றனர். பாட வாரியாக கலந்தாய்வு நடந்தது.

The post முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: