போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

குமாரபாளையம், ஜூலை 24: குமாரபாளையம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் சிவசுந்தரம் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். திட்ட இயக்குனர் மனோ டிஎன்பிசி போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் ரோட்டரி சங்கம் மேற்கொண்டுள்ள இந்த பயிற்சி வகுப்புகள் 2 ஆண்டுகள் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களை அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய தேவையான பயிற்சிகள், இந்த வகுப்பில் இலவசமாக கற்பிற்கப்படுகிறது. தற்போது சுமார் 100 மாணவ, மாணவிகளுக்கு இந்த வகுப்புகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புகள் விரிவு படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் இறுதியில் விடியல் பிரகாஷ் நன்றி கூறினார்.

The post போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: