இரும்பு கம்பி திருடிய 2பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூலை 24: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒசஅள்ளியை சேர்ந்த கோவிந்தன் (57) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 22ம் தேதி அவர் பணியில் இருந்த போது, 2பேர் அந்த நிறுவன வளாகத்தில் இருந்த, 18கிலோ இரும்பு கம்பிகளை திருட முயன்றனர். இதை கவனித்த கோவிந்தன் அவர்களை மடக்கி பிடித்து, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் சாப்பரனப்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ்(32), ராஜேந்திரன்(40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post இரும்பு கம்பி திருடிய 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: